கனடா செய்திகள்

Air Canada தொழிலாளர் பேச்சு வார்த்தைகளில் அரசாங்க தலையீட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறது

Air Canada மற்றும் வணிகத் தலைவர்கள் ஒட்டாவாவை அதன் விமானிகளுடனான தொழிலாளர் பேச்சுவார்த்தையில் தலையிடத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர், ஆனால் அரசாங்கம் இரு தரப்பையும் சுயாதீனமாக பிரச்சினையை தீர்க்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 110,000 தினசரி பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க இடையூறுகளைத் தடுக்க நடுவர் மூலம் தலையிடுமாறு விமான நிறுவனம் மத்திய அரசைக் கோரியுள்ளது.

5,200 இற்கும் மேற்ப்பட்ட Air Canada விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Air Line Pilots Association இனுடைய corporate பேராசையால் பேச்சுவார்த்தைகள் தடைபடுவதாக குற்றம் சாட்டுகிறது. Air Canada தொடர்ந்து சாதனை இலாபத்தைப் பதிவுசெய்து வருவதால், சந்தைக்குக் குறைவான இழப்பீட்டை விமானிகள் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பொறுப்பு Air Canada இற்கு உள்ளதாக Air Canada master executive council இனுடைய துணைத் தலைவரான Jesse Jantzi தெரிவித்தார். மேலும் இவர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விமான நிறுவனம் அழுத்தம் கொடுப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், இரு தரப்பினருக்கும் வெற்றியை அளிக்கும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிப்பதில் தொழிற்சங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை முதல், விமான நிறுவனமும் அதன் கூட்டாளர்களும் 72 மணிநேர வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பு அறிவிப்பை வெளியிடுவார்கள். மேலும் இது மூன்று நாள் wind down திட்டத்தைத் தூண்டும் மற்றும் செப்டம்பர் 18 அன்று முழு வேலை நிறுத்தத்தைத் தொடங்கும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

Related posts

Jasper காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்ட அதிகாரிகளை Trudeau சந்தித்தார்

admin

2024 இல் Ontario தேர்தலை Ford நிராகரிக்கிறது, ஆனால் 2025 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம்

admin

கனேடிய இளைஞர்கள் credit products இற்கான பணம் செலுத்துவதில்லை: Equifax

admin