கனடா செய்திகள்

விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை இங்கிலாந்து கோருகிறது

கனடாவில் அதிகரித்து வரும் வன்முறைக் குற்றங்களில் புது டெல்லி ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகின்றது. இதற்கிடையில் நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் அவசரக் கூட்டத்தைக் கோரியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு Ottawa எவ்வாறு சிறந்த பதிலளிப்பது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வார்கள்.

கனேடிய குடிமக்களை மிரட்டி பணம் பறித்தல், வற்புறுத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்றவற்றில் இந்திய முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு RCMPயிடமிருந்து நம்பகமான ஆதாரங்களைத் தொடர்ந்து கனடா ஆறு இந்திய தூதர்களை வெளியேற்றியுள்ளது. மேலும் RCMP கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஆறு தூதர்களுக்கு ராஜதந்திர விலக்கு அளிக்க இந்தியா மறுத்துவிட்டது. கனடாவின் அடுத்த நடவடிக்கைகள் கனேடியர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பாக வைத்திருப்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சீக்கியர்களின் தாயகம் வேண்டும் என்று வாதிடும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து குற்றவியல் அமைப்புகளுக்கு வழிவகுத்த தகவல்களை இந்திய அதிகாரிகள் சேகரித்ததாக கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர். பிரிவினைக்கான கனேடிய வாக்கெடுப்புகள் மற்றும் 2020 இந்திய விவசாயிகள் எதிர்ப்புகள் பற்றிய Trudeau இன் கவலைகளை மோடி விமர்சிக்கிறார், அதே நேரத்தில் காலிஸ்தான் பிரச்சினை தொடர்பாக கனேடிய குடிமக்கள் அல்லது அதிகாரிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று Yale University விரிவுரையாளார் Sushant Singh வலியுறுத்துகிறார்.

கனேடிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அமெரிக்கா நீண்ட காலமாக இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தோடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நீதித்துறை செயல்முறைக்காகக் காத்திருப்பதாக நியூசிலாந்து கூறியுள்ளது.

Related posts

பொதுத்தேர்தலில் Liberal கட்சியே ஆட்சியை கைப்பற்றும். – முன்னாள் பிரதமர்.

canadanews

Liberal அரசாங்கத்தை வீழ்த்த NDP வாக்களிக்கும் என Singh தெரிவிப்பு

admin

Federal NDP அடிப்படை மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த விரும்புகிறது

admin