கனடாவின் பழிவாங்கும் வரிகள் காரணமாக, Ontario வில் உள்ள Sun-Brite Foods Inc. என்ற மிகப்பெரிய தக்காளி பதப்படுத்தும் நிறுவனம் தங்கள் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் விலையை ஒரு கலனுக்கு 40 cents வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கிறது. தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த அமெரிக்காவில் உற்பதியாகும் அதிக கலன்களை தாம் பயன்படுத்துவதால் இப்பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுவதாக நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் கலன்களுக்கு சமமான தொகையை வாங்குகிறோம், இது சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர் என்று நிறுவனத்தின் CEO, John Iacobelli கூறினார். Dalhousie University யின் உணவு ஆராய்ச்சியாளரான Sylvain Charlebois இதுபற்றி கூறுகையில் கனேடிய அரசாங்கம் பரஸ்பர கட்டணங்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ஏனெனில் வரிகள் அத்தியவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதுடன் உணவு பணவீக்கத்தையும் உருவாக்கும் என்று கூறினார்.
இதிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழி விலைகளை அதிகரிப்பதுதான் ஆனால் அது நுகர்வோரைப் பாதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். அத்துடன் பதிவு செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் விலை உயர்வை நுகர்வோருக்கு வழங்க வேண்டியிருக்கும் என்றார்.
வரிகள் காரணமாக தேவையற்ற பணவீக்கமே ஏற்படும் என்று Iacobelli உம் கூறுகின்றார். உலகின் அநேகமான நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பழிவாங்கும் வரிகளை 90 நாட்கள் இடைநிறுத்தியதுடன் கனடாவுக்கு விலக்களிப்பு வழங்கியிருந்தது. ஆயினும் இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரிகளும் CUSMA ஒப்பந்தத்திற்கு இணங்காத அனைத்து தயாரிப்புகளுக்கும் 25 சதவீத வரிகளும் நடைமுறையில் உள்ளன.