அமெரிக்காவினால் அண்மையில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் கடினமாக்கப்பட்டுள்ள சுங்க அனுமதிகள் காரணமாக திங்கட்கிழமை தொடக்கம் 800 அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய பொதிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக DHL நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் Donald Trump விதித்த வரிகளில் எல்லையைக் கடக்கும் நுகர்வோர் ஏற்றுமதிக்கான முன்னைய வரி விலக்கை $2,500 இலிருந்து $800 ஆகக் குறைத்தார். இதனால் ஒரு வர்த்தகத்திலிருந்து இன்னொரு வர்த்தகத்திற்கான ஏற்றுமதி பாதிக்கப்படாது அதே நேரத்தில் வணிகங்கள் அல்லது நுகர்வோருக்கு $800 க்கும் குறைவான ஏற்றுமதிகளும் பாதிக்கப்படாது.
அமெரிக்காவின் இந்த எல்லையை அதிகரிக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாக கூறும் DHL நிறுவனம் 800 அமெரிக்க டொலருக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எங்கிருந்து வந்தாலும் பல நாட்கள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஒரு தற்காலிக நடவடிக்கை எனவும் நிலைமை வழமைக்கு திரும்பும்போது தகவல்களை வெளியிடுவதாகவும் மேலும் அந்த அறிக்கையில் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.