பொதுப்பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தமிழ் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதை செய்திப்பிரிவு ஒன்றிற்கு அளித்த அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் கனடாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு தலைமை தாங்கும் அமைச்சரின் அறிவிப்பானது எல்லை மீறுதல் தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்கவில்லை.
“மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதல் பற்றிய கருத்தும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் ஒரு வெளிப்படுத்தலை செயல்படுத்துமாறு பொது பாதுகாப்பு அதிகாரிகளிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்று அமைச்சர் கூறினார்.
அனைத்து தேசிய பாதுகாப்பு முடிவுகளிலும், தனது மிக முக்கியமான கவலை கனடியர்களின் பாதுகாப்பு, பாரபட்சமின்றி, திறம்பட தங்கள் பணியைச் செய்யும் சட்ட அமுலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களை ஆதரிப்பேன் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Anandasangaree 1983 இல் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்தார், வழக்கறிஞரான அவர் 2015 இல் Toronto வின் Scarborough பகுதியில் Liberal நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஒரு தமிழ் சமூக ஆர்வலராகவும் Realtor ஆகவும் இருந்தார்.
இலங்கையின் தமிழீழ புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட கப்பலில் வந்தவர்களுக்கு முறையான அகதி உரிமைகோர முடியும் என்று அவர் கூறியதாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் கையாளும் போது, அவரும் அவரது மனைவியும் கனடாவின் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Anandasangaree, Canada Border Services Agency மற்றும் RCMP ஆகியவை குடியேறுபவர்களை மிரட்டுதல் மற்றும் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இரண்டு நிறுவனங்களும் தற்போது அவருக்கு அறிக்கை அளிக்கின்றன.
செவ்வாயன்று, அமைச்சர் எல்லை மற்றும் குடியேற்ற பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோத இடம்பெயர்வை எதிர்த்துப் போராடுவதற்கும், ஓரளவு விரிவாக்கப்பட்ட கடல்சார் கண்காணிப்புக்கள் மூலம் புதிய சட்டத்தை அறிவித்தார். எனினும் முன்னாள் CBSA அதிகாரி Kelly Sundberg, கனடாவின் எல்லைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் Anandasangaree சரியான நபரா என்று கேள்வி எழுப்பினார்.
