பயங்கரவாதம் உட்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் ஒரு சட்டம் உள்ளடங்கலாக வெறுப்பு தொடர்பான நான்கு புதிய குற்றங்களை உருவாக்க Liberal அரசாங்கம் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையாக இருக்கும்.
நீதி அமைச்சர் Sean Fraser இந்த மசோதா தொடர்பில் கூறும்போது, வெறுப்பு சின்னங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேண்டுமென்றே வெறுப்பை ஊக்குவிப்பதை குற்றமாகக் கருதும் என்று கூறினார். எனினும் இது குறிப்பிட்ட சின்னங்களுக்கு தடையாக அமையாது என Fraser மேலும் கூறினார்.
இந்த மசோதா, அடையாளம் காணக்கூடிய குழுவால் பயன்படுத்தப்படும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் முதியோர் குடியிருப்புகள் போன்றவற்றின் மீதான தடை மற்றும் மிரட்டல்களையும் குற்றமாக உருவாக்கும்.
குறிப்பிட்ட கட்டிடங்களைச் சுற்றி போராட்டங்களைத் தடைசெய்ய இந்த மசோதா “bubble zones” உருவாக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அத்தகைய பாதுகாப்பு வலயங்களை உருவாக்க மாகாணங்கள் அல்லது உள்ளூராட்சி சபைகளே உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மசோதா வெறுப்பு குற்றத்தின் ஒரு புதிய வகையையும் உருவாக்கும், இது ஏற்கனவே உள்ள குற்றங்களுக்கு மேலதிகமாக இருக்கும், மேலும் பாதிக்கப்பட்டவர் மீதான வெறுப்பால் குற்றம் தூண்டப்பட்ட வழக்குகளுக்கு இது பொருந்தும் என்று Fraser கூறினார். இதன்கீழ் அடிப்படையிலேயே குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையை மேலும் அதிகரிக்கும்.
