கனடா செய்திகள்

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியில் Dubai இல் இருந்து ஒரு தொகுதி கனேடியர்கள் நாடு திரும்பினர்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டு பயணக் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், Dubai இல் இருந்து வெள்ளிக்கிழமை காலை ஒரு தொகுதி கனேடியர்கள் Toronto அழைத்து வரப்பட்டனர்.

​நாடு திரும்புவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது நீண்ட மற்றும் கவலையளிக்கும் ஒரு செயலாக இருந்ததாகத் தாயகம் திரும்பிய பயணிகள் விவரித்தனர். இதற்கிடையில், அந்தப் பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதற்காக நூற்றுக்கணக்கான ஆசனங்களை விமானங்களில் தாங்கள் உறுதி செய்துள்ளதாக கனேடிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக, Toronto மற்றும் Dubai இடையேயான தனது அனைத்து விமான சேவைகளையும் குறைந்தபட்சம் March 28 வரையிலும், Toronto மற்றும் Tel Aviv இடையேயான விமான சேவைகளை May 2 வரையிலும் இரத்துச் செய்வதாக Air Canada வெள்ளிக்கிழமை மதியம் தெரிவித்தது.

காலாவதியான கடவுச்சீட்டுடன் தாயகம் திரும்ப விரும்பும் கனேடியர்களுக்கு அவசரகால பயண ஆவணங்கள் (emergency travel document) கிடைப்பதை உறுதி செய்ய தனது அமைச்சகம் பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சர் Anita Anand தெரிவித்தார். அவசரகால ஆவணம் தேவைப்படுபவர்கள் உள்ளூர் கனேடிய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

Editor

July 1-ஆம் திகதிக்குள் அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தக பிரச்சினைகளும் தீர்க்கப்படப் போவதில்லை.

canadanews

லிபரல் மற்றும் NDP கட்சிகளை விட வலுவான நிதி திரட்டலுடன் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் கன்சர்வேட்டிவ் கட்சி

canadanews