கனடா செய்திகள்

LCBO ஒப்பந்தத்திற்குப் பிந்தைய தகராறு தீர்க்கப்பட்டது: கடைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும்

Ontario Labour Relations Board (LCBO) மற்றும் தொழிற்சங்க ஊழியர்களிடையே ஒரு தற்காலிக ஒப்பந்தம் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அத்தோடு செவ்வாய்கிழமை கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. Ontario Public Service Employees Union (OPSEU) பிரதிநிதித்துவப்படுத்தும் 9,000 LCBO தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளது.

OPSEU பிரதிநிதிகள் LCBO உடன் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டிய பிறகும் வேலைநிறுத்தம் தொடரும் என்று கூறினர், அத்தோடு அவர்கள் வேலைக்கு திரும்புவதற்கான நெறிமுறையில் கையெழுத்திடவும் மறுத்தனர். மேலும் LCBO அதிகாரிகள் தொழிற்சங்கம் வேலைக்கு திரும்புவதற்கான நெறிமுறையின் ஒரு பகுதியாக புதிய பணக் கோரிக்கைகளுடன் திரும்பியுள்ளதாகவும், OPSEU க்கு எதிராக நியாயமற்ற தொழிலாளர் நடைமுறையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து OPSEU இன் தலைவரான JP Hornick அந்த உறுதிமொழியை மறுத்தார். சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட வேலைக்குத் திரும்புவதற்கான நெறிமுறையில் புதிய பணப் பொருட்கள் எதுவும் இல்லை என்று LCBO தெரிவித்துள்ளது.

தற்காலிக ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. முன்னணி ஊழியர்கள் திங்கள்கிழமை திரும்பி வந்தாலும், செவ்வாய்க்கிழமை வரை கடைகள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது.

Related posts

தட்டம்மை நோய் பரவல் தீவிரம்;

Editor

Toronto பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் – மத்திய அரசு ஆய்வு

admin

வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ள Trudeau அரசாங்கம் தயாராகிறது

admin