கனடா செய்திகள்

Lebanon இல் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டனர்- பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம், இஸ்ரேல் படையெடுப்பு பற்றி யோசனை

Lebanon இல் அதிகரித்து வரும் வன்முறையினால் கனடாவினைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கனேடிய குடிமக்களை நாட்டிலிருந்து அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக கனேடியர்களை வெளியேற்றுவதற்கு Ottawa இற்கு NDP அழைப்பு விடுத்தது, இருப்பினும் வணிக ரீதியாக வெளியேறுவது சாத்தியமற்றதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வெளியேற்றம் நடைபெறும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly சொத்துக்களை நிலைநிறுத்துவதற்கான அனுமதியைப் பெறுதல் மற்றும் உள்ளூர் உதவியைப் பெறுதல் உட்பட, சாத்தியமான வெளியேற்றங்களுக்குத் தயாரிப்பதில் கனேடியர்களுக்கு UK உதவுவதாகத் தெரிவித்தார்.

Lebanon இல் கிட்டத்தட்ட 45,000 கனேடியர்கள் இருப்பதாக Joly கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும் வணிக விமானங்கள் இருக்கும் போதே அவர்களை வெளியேறும்படி பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றார். Joly இன் கூற்றுப்படி Beirut விமான நிலையத்தில் புதன்கிழமை வரை தினமும் 50 விமானங்கள் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், விமான நிறுவனங்கள் அக்டோபர் விமானங்களை காலவரையின்றி ரத்து செய்வதாக கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டில் Israel-Hezbollah போரைத் தொடர்ந்து இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற தரைவழிப் பாதைகள் காரணமாக $94 மில்லியன் செலவில் 14,370 பேரை Lebanon இல் இருந்து கனடா வெளியேற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான கனேடியர்களை வெளியேற்றுவதற்கான ஒரே வழிமுறையாக Beirut துறைமுகம் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று Liberal MP Fayçal El-Khoury தெரிவித்தார்.

Lebanon இல் இருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்த 110,000 மக்களைத் தவிர, ஐந்து நாட்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் 90,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

Related posts

தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan தனது அமைச்சரவையில் இருந்து விலக உள்ளார்

admin

கனடாவின் பணவீக்க விகிதம் 2.5% ஆக குறைவு

admin

Olympics இன் 2 வது நாளில் Harvey வெண்கலத்தை கைப்பற்றினார் – மீண்டும் அரங்கில் கனேடிய பெண்களின் கால்பந்து

admin