கனடா செய்திகள்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு குறைவான முதலாளிகளை தகுதியுடையதாக மாற்றும் புதிய விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று வேலைவாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு வணிகங்கள் தங்கள் பங்களிப்பை அதிகரித்ததால், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர் திட்டம் புதுப்பிக்கப்பட்ட ஆய்வுக்கு உட்பட்டது.

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் பொது தரவுகளின்படி, 183,820 தற்காலிக வெளிநாட்டு பணியாளர் அனுமதிகள் 2023 இல் நடைமுறைக்கு வந்துள்ளன. இது 2019 இல் 98,025 ஆக இருந்தது. இது 88 சதவீதம் அதிகரித்துள்ளது. கனடாவின் சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி மக்கள்தொகை மதிப்பீடானது ஏப்ரல் 1 ஆம் திகதியின்படி தற்காலிக குடியிருப்பாளர்கள் மக்கள்தொகையில் 6.8 சதவீதமாக உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாகக் குறைக்கும் திட்டத்தை Boissonnault மற்றும் குடிவரவு அமைச்சர் Marc Miller அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்ப்பட்ட பாரிய அதிகரிப்பு கனடா முழுவதும் கிடைக்கக்கூடிய வீட்டுவசதி நெருக்கடிக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

Toronto Pearson விமான நிலைய Screeners இனால் தற்காலிக ஒப்பந்தம் நிராகரிப்பு – வேலைநிறுத்தம் தொடரும் சாத்திம்

admin

2024 முதல் கனேடியர்களுக்கான carbon வரிச்சலுகை!

Editor

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Editor