ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த மூன்றாண்டு நிறைவையொட்டி கனடாவின் நகரங்களான Halifax, Montreal, Ottawa, Toronto, Winnipeg, Calgary மற்றும் Vancouver ஆகிய நகரங்களில் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
Feb. 24, 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருந்தது இதனை நினைவு படுத்தும் விதமாக கனடாவில் இந்த வாரஇறுதி நாட்களில் சில நகரங்களில் பேரணிகள் தொடங்கின, திங்கட்கிழமையும் சில நகரங்களில் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய மற்றும் மிகக் கொடிய மோதல் இதுவாகும் மேலும் இது இலட்சக்கணக்கான இராணுவ உயிரிழப்புகளையும் பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய பொதுமக்களின் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருந்ததுடன் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.