கனடா செய்திகள்

Toronto பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் – மத்திய அரசு ஆய்வு

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதக் குழுவுடன் சந்தேகத்திற்குரிய தொடர்புகளைக் கொண்ட இருவர் கனடாவிற்குள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்பதை federal departments ஆய்வு செய்து வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc கூறுகிறார்.

Ahmed Fouad Mostafa Eldidi (வயது 62) மற்றும் அவரது மகன் Mostafa Eldidi (வயது 26) ஆகியோர் கடந்த வாரம் Richmond Hill இல் கைது செய்யப்பட்டு ஒன்பது வெவ்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். இருவரும் Toronto இன் ஒரு தீவிரமான வன்முறைத் தாக்குதலைத் திட்டமிடுவதாக RCMP கூறியது. இவர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கனடாவில் நடப்பதாகக் கூறப்படும் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை, ஆனால் மூத்த Eldidi கனடாவுக்கு வெளியே ஒரு மோசமான தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

தந்தை கனேடிய குடிமகன் என்பதை RCMP உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மகன் கனேடிய குடிமகன் இல்லை. Mostafa Eldidi இன் நிலையை உறுதிப்படுத்துவதற்காக காவல்துறை காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நபர் எப்படி கனடாவிற்குள் நுழைந்து கனேடிய குடியுரிமையைப் பெற்றார்? கனடாவில் இதே போன்ற பின்னணியைக் கொண்ட வேறு யாராவது நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்களா என்பதை அறிய கனேடியர்களுக்கும் உரிமை உண்டு என்று Conservative House தலைவர் Andrew Scheer கூறியுள்ளார்.

Related posts

Paris நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவினை Celine Dion நடத்தினார்

admin

Trudeau இற்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த நபர் RCMP இனால் கைது

admin

கனேடியர்களுக்கு இரண்டு பில்லியன் புதிய மரங்களை வழங்க Ottawa உறுதி

Editor