கனடா செய்திகள்

கனடாவின் Haiti airlift ஆனது குடியிருப்புக்கள், உறவினர்கள் மற்றும் charter flight வசதிகளை கொண்டதாக விரிவாக்கப்படுகின்றது

நிபந்தனைகளுக்குட்பட்டு, புதன்கிழமை முதல் உறவினர்கள் மற்றும் கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்களை Haitiயிலிந்து வெளியேற்றும் பணியை கனடா விரிவுபடுத்துகிறது. மேலும் சந்தைக் கட்டணத்தைச் செலுத்தும் கனேடியர்களுக்கு Montreal இல் இருந்து Port-au-Prince க்கு பறக்க அரசாங்கம் charter flight இனை ஏற்பாடு செய்துள்ளது.

”நாங்கள் குடும்பங்களைப் பிரிக்க விரும்பவில்லை. ஆகவே நாங்கள் இப்போது நிரந்தர குடியுரிமையுள்ள கனேடியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றுக்கொள்வோம்” என வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.

Haiti யிலிந்து Dominican குடியரசிற்குள் 153 குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானங்களில் கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களையும், கனேடியர்களின் வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்களையும் அனுமதிக்குமாறு Ottawa ஆனது Dominican குடியரசை வலியுறுத்தியிருந்தனர்.

முதல் charter flight இனுள் 80 கனேடியர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ இருக்க வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, கனடாவுடன் தொடர்புள்ள 3,110 பேர் தானாக முன்வந்து Ottawaவுடன் Haitiயில் தங்கள் இருப்பை பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 300 பேர் உதவியை நாடி இருந்தனர். ஆனால் இப்போது மேலும் 200 பேர் வெளியேற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

​​Ottawa மேற்கு அரைக்கோளத்தில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் 15,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க ஒரு வருடத்திற்கு முன்பு உறுதியளித்தாக குடிவரவு அமைச்சர் Marc Miller குறிப்பிட்டார்.

Related posts

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin

கனடா ஏற்பாடு செய்த விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Lebanon இல் இருந்து வெளியேற்றம் – GAC தெரிவிப்பு

admin

மாகாண கார் திருட்டுப் பணிக்குழுவினால் 124 பேரைக் கைது – 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 177 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

admin