கனடா செய்திகள்

கனேடிய நிறுவனங்களில் அதிக வெடிகுண்டு மிரட்டல்கள் – RCMP பதிலளிப்பு

வியாழக்கிழமை சில புதிய அச்சுறுத்தல்கள் ஜெப ஆலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக கனடா முழுவதும் உள்ள நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பதிலளிப்பதாகவும், சந்தேகத்திற்குரிய நபரைகளை அடையாளம் கண்டு அவர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச பொலிசாருடன் நெருங்கிய கூட்டுறவுடன் பணியாற்றி வருவதாகவும் RCMP கூறுகின்றது.

புதன்கிழமையன்று யூத அமைப்புகளை குறிவைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக Toronto பொலிசார் Bathurst Street மற்றும் Sheppard Avenue West பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் பாதுகாப்பானதாக கருதப்பட்டது.

வியாழன் அன்று mall e-mails மூலம் பிராந்தியத்தில் உள்ள பொது இடங்களுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளதாக York Regional Police (YRP) கூறுகின்றது. மேலும் இந்த அச்சுறுத்தல் எந்த மத நிறுவனங்களையும் குறிவைக்கப்படவில்லை எனவும், இந்த அச்சுறுத்தல்கள் ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பப்பட்டவை எனவும் YRP தெரிவித்துள்ளனர்.

ஜெப ஆலயங்கள் மற்றும் ஒட்டாவா பகுதி மருத்துவமனைகளை குறிவைத்து புதன்கிழமை காலை முதல் அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டன. Ottawa மருத்துவமனையின் அறிக்கையில் இன்று அதிகாலையில் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறுகின்றது. மேலும் B’nai Brith Canada 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு காலை 5 மணிக்கு ET Toronto மற்றும் Montreal இல் உள்ள அலுவலகங்கள் உட்பட, வெடிகுண்டுகள் அச்சுறுத்தும் மின்னஞ்சலைப் பெற்றதாக அறிவித்தது.

Related posts

ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் அலை மாற்றத்தைத் தொடர்ந்து Joly தனது புதிய British பிரதிநிதியை சந்திக்கின்றார்

admin

குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கட்டுப்படுத்த குடியேற்ற இலக்குகளை குறைப்பதைக் கனடா கருத்தில் கொள்ள வேண்டும்

admin

ஆயுத விசாரணையில் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்: Waterloo Regional Police

admin