கனடா செய்திகள்

லெபனானில் சுமார் 45,000 கனடியர்கள் இருப்பதாக Joly தெரிவிப்பு; pager வெடிப்புகள் குறித்து கவலை வெளியிட்டார்

Lebanon இல் 45,000 கனேடியர்கள் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly அறிவித்துள்ளார், மேலும் நிலைமை மோசமடைந்தால் Ottawa அவர்களை வெளியேற்ற எந்த உத்தரவாதமும் இல்லை என்று எச்சரித்துள்ளார். அத்தோடு அவர் pagers இனை வெடிக்கச் செய்வது போன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்தும் கவலை தெரிவித்தார். அத்தோடு Lebanon இற்கு செல்ல நினைக்கும் கனேடியர்களை அங்கு செல்ல வேண்டாம் என தான் பல மாதங்களாக எச்சரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது Hamas தாக்குதல் நடத்தியதில் இருந்து, Hezbollah போராளிகள் வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை சுட்டு வருகின்றனர், இதனால் எல்லைக்கு அருகில் உள்ள சமூகங்கள் வெளியேறவும், பொதுமக்கள் மற்றும் Hezbollah உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கவும் செய்தது.

கனேடியர்களை Lebanon இனை விட்டு வெளியேறுமாறு Joly வலியுறுத்தியுள்ளார் மற்றும் இராணுவம் வெளியேற்றும் நடைமுறைகளை மதிப்பீடு செய்து வருகிறது. வெளியேற்றப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறிப்பிடவில்லை, ஆனால் சுமார் 21,400 நபர்கள் Global Affairs Canada இல் முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர்.

Related posts

Rafah தாக்குதல் தொடர்பில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

Editor

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

Editor

ஐ.நா.வின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் தலைவராக Bob Rae தேர்ந்தெடுக்கப்பட்டார்

admin